Published : 09 May 2017 05:54 PM
Last Updated : 09 May 2017 05:54 PM
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்குரியவரானார் இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி.
இவர் தென் ஆப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் 4 அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
153 போட்டிகளில் 181 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இதுகாறும் இந்தச் சாதனையை வைத்திருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு வீராங்கனை காத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் (180 விக்.) சாதனையை முறியடித்தார்.
20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜுலன் கோஸ்வாமி தென் ஆப்பிரிக்காவின் கடைசி வீரர் ரைசிபி டொசாக்கேயை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீராங்கனையானார்.
டாப் 5 பவுலர்களில் 2 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் இடது கை ஸ்பின்னர் நீத்து டேவிட் 141 விக்கெட்டுகளுடன் 4-ம் இடத்தில் உள்ளார்.
மகளிர் கிரிக்கெட் உலகில் அதிக வேகம் வீசக்கூடிய பவுலராகக் கருதப்படும் ஜுலன் கோஸ்வாமி 2002-ம் ஆண்டு அறிமுகமானார். இந்திய மகளிர் அணியின் ஸ்ட்ரைக் பவுலராக இருந்து வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருமுறை 31 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கோஸ்வாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT