Last Updated : 17 Feb, 2017 11:00 AM

 

Published : 17 Feb 2017 11:00 AM
Last Updated : 17 Feb 2017 11:00 AM

2-வது பட்டத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் ஜூல்பிஹருடன் மோதுகிறார் விஜேந்தர் சிங்: ஏப்ரல் 1-ல் மும்பையில் நடைபெறுகிறது

டபிள்யூபிஓ ஆசிய பசிபிக் குத்துச்சண்டை போட்டியின் சாம்பியன் பட்டத்தை தக்கவைத் துக்கொண்ட இந்தியாவின் தொழில் முறை குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங் தனது 2-வது பட்டத்துக்கான போட்டியில் சீன வீரர் ஜூல்பிஹர் மைடியாலியை எதிர்கொள்ள உள்ளார். இந்த ஆட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.

31 வயதான விஜேந்தர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற போட்டியில் தான்சானியா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் செகாவை வீழ்த்தி ஆசிய பசிபிக் குத்துசண்டை போட்டியின் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இதன் மூலம் தான் பங்கேற்ற 8 போட்டிகளிலுமே விஜேந்தர் வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத நாயகனாக வலம் வருகிறார். இதில் 7 ஆட்டங்களில் அவர் நாக் அவுட்டில் வெற்றி பெற்றார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

விஜேந்தர் தற்போது மான் செஸ்டர் நகரில், தனது பயிற்று நரான இங்கிலாந்தின் லீ பியர்டுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏப்ரல் 1-ம் தேதி ஜூல்பிஹருக்கு எதிரான ஆட்டமானது விஜேந்தர் தனது சொந்த நாட்டில் விளை யாடும் 3-வது தொழில்முறை பட்டத்துக்கான போட்டியாகும்.

விஜேந்தர் இருமுறை வென்ற பட்டத்துக்கான ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்றன. தற்போது முதன்முறையாக மும்பையில் போட்டி நடத்தப்பட உள்ளது. ஜூல்பிஹரும் விஜேந்தர் போன்றே கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொழில்முறை போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இதுவரை அவர் 8 போட்டிகளில் பங்கேற்று 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். தொழில்முறை குத்துச்சண்டையில் சீனாவில் நம்பர் ஒன் வீரராக திகழும் அவர் 5 முறை நாக் அவுட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் தான்சானியாவை சேர்ந்த தாமஸ் மஷாலியை வீழ்த்தி ஓரியன்டல் பட்டத்தை ஜூல்பிஹர் வென்றிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x