Published : 12 Sep 2016 09:02 AM
Last Updated : 12 Sep 2016 09:02 AM

4 நாள் கிரிக்கெட் போட்டி: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா - ஏ தோல்வி

ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியா - ஏ மற்றும் ஆஸ்தி ரேலியா - ஏ அணிகளுக்கு இடை யிலான 4 நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 230 ரன்களையும், ஆஸ்திரேலியா 228 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் 156 ரன்களில் சுருண்டது. வெற்றிபெற 159 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா - ஏ அணி 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களை எடுத்திருந்தது.

ஆட்ட நாயகன்

இந்நிலையில் நேற்று நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான காமரோன் பான்கிராப்ட் சிறப்பாக ஆடி 58 ரன்களைக் குவித்தார். அவரது பேட்டிங்கின் உதவியால் ஆஸ்திரேலியா - ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களையும், வருண் ஆரோன் 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா - ஏ அணியின் கேப்டன் ஹாண்ட்ஸ்காம்ப் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான காமரோன் பான்கிராப்ட் சிறப்பாக ஆடி 58 ரன்களைக் குவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x