Published : 12 Sep 2016 09:02 AM
Last Updated : 12 Sep 2016 09:02 AM
ஆஸ்திரேலியா - ஏ அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா - ஏ மற்றும் ஆஸ்தி ரேலியா - ஏ அணிகளுக்கு இடை யிலான 4 நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 230 ரன்களையும், ஆஸ்திரேலியா 228 ரன்களையும் எடுத்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் 156 ரன்களில் சுருண்டது. வெற்றிபெற 159 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா - ஏ அணி 3-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களை எடுத்திருந்தது.
ஆட்ட நாயகன்
இந்நிலையில் நேற்று நடந்த 4-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான காமரோன் பான்கிராப்ட் சிறப்பாக ஆடி 58 ரன்களைக் குவித்தார். அவரது பேட்டிங்கின் உதவியால் ஆஸ்திரேலியா - ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களையும், வருண் ஆரோன் 2 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா - ஏ அணியின் கேப்டன் ஹாண்ட்ஸ்காம்ப் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக் கப்பட்டார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான காமரோன் பான்கிராப்ட் சிறப்பாக ஆடி 58 ரன்களைக் குவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT