Published : 15 Sep 2016 09:25 AM
Last Updated : 15 Sep 2016 09:25 AM
தாய்லாந்து வாள்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு கோவையைச் சேர்ந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த தமிழ் கனி, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியைச் சேர்ந்த நிவேதா, சசிகலா, பிஎஸ்ஜி தொழிநுட்ப கல்லூரியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
மேற்கண்ட தகவலை இந்திய அணியின் மேலாளர் ஆல்பர்ட் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT