Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடமிஸ்பா ஆர்வம்

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாகவுள்ள மிஸ்பா உல் ஹக் டி20 போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்த நிலையில் டி20 போட்டியில் மீண்டும் விளையாட ஆர்வம் காட்டி வரும் அவர் மேலும் கூறியது:

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகினேன். எனினும் உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தேர்வுக் குழுவினரும் நான் டி20 போட்டியில் விளையாட வேண்டும் என விரும்பினால் மீண்டும் டி20 போட்டியில் விளையாடுவேன் என்றார்.

சமீபத்திய தொடர்களில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியிருந்தாலும் தனக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை என்று குறிப்பிட்ட மிஸ்பா, “என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேப்டன் பதவியை சவாலாக எடுத்துக் கொள்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோற்றாலும் அது மோசமான தோல்வியல்ல. தோல்வியில் இருந்து மீள முடியும் என்பதில் நாங்கள் எப்போதுமே உறுதியாக இருக்கிறோம். இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று நாங்கள் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x