Published : 01 Apr 2017 10:10 AM
Last Updated : 01 Apr 2017 10:10 AM

இந்தியா ஓபன் பாட்மிண்டன்: சாய்னாவை வீழ்த்தினார் சிந்து

இந்தியா ஓபன் சீரிஸ் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் சாய்னா நெவாலை வீழ்த்திய பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறி னார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதியில் இந்திய நட்சத்திர வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் மோதினர்.

முதல் செட்டில் சாய்னா 7-5 முன்னிலையில் இருந்தார். அதன் பின்னர் துடிப்பாக விளையாடிய சிந்து 11-9 முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து 17-12 என வலுவான நிலையை எட்டினார். இறுதியில் முதல் செட்டை 21-16 என கைப்பற்றினார் சிந்து.

2-வது செட்டில் சாய்னா தொடக்கத்திலேயே நெருக்கடி கொடுத்தார். இதனால் அவர் 6-3 என முன்னிலை பெற்றார். ஒரு கட்டத்தில் 14-10 என முன்னிலையில் இருந்த சாய்னா திடீரென சரிவை சந்தித்தார். சிந்து தனது ஆக்ரோஷ ஆட்டத்தால் 12-14 என நெருங்கி வந்தார். இதனால் சுதாரித்து விளையாடிய சாய்னா 19-16 என்ற அளவில் முன்னிலையை அடைந்தார்.

எனினும் அடுத்தடுத்த 2 புள்ளிகள் பெற்ற சிந்து 18-19 என நெருங்கினார். ஒரு கட்டத்தில் சாய்னா பெரிய தவறு செய்தார். அவர் சர்வ் செய்த பந்து நெட்டில் விழ ஆட்டம் 20-20 என சமநிலையை எட்டியது.

இந்த நிலையில் ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து அடுத்தடுத்து இரு புள்ளிகள் சேர்க்க 2-வது செட்டை சிந்து 22-20 என கைப்பற்றினார். முடிவில் 21-16, 22-20 என்ற நேர் செட்டில் சிந்து வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 47 நிமிடங்கள் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x