Last Updated : 30 Oct, 2014 03:16 PM

 

Published : 30 Oct 2014 03:16 PM
Last Updated : 30 Oct 2014 03:16 PM

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி நவ.4-ஆம் தேதி தேர்வு

ஆஸ்திரேலியா பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 4-ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளதாக பிசிசிஐ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பையில் நவ.4-ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் அணித் தேர்வுக்குழுவினர் கூடி அணியை தேர்வு செய்யவுள்ளனர்.

நவம்பர் 21-ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்கிறது.

டிசம்பர் 4-ஆம் தேதி முதல் ஜனவரி 7, 2015 வரை 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

இந்த முறை பெர்த் மைதானத்தில் டெஸ்ட் போட்டி இல்லாததால், பிரிஸ்பன், அடிலெய்ட், மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய மைதானங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x