Published : 09 Sep 2018 09:34 AM
Last Updated : 09 Sep 2018 09:34 AM

58-வது காவல்துறை விளையாட்டுப் போட்டி: தென்மண்டல அணி ஒட்டுமொத்த சாம்பியன்

தமிழ்நாடு காவல்துறையின் 58-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் 7அணிகளின் சார்பில் 459 வீரர்கள், 156 வீராங்கனைகள் என 615 பேர் கலந்து கொண்டனர்.

கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் மத்திய மண்டல அணி முதலிடம், தென்மண்டல அணி இரண்டாமிடம், சென்னை பெருநகர அணி மூன்றாமிடம் பிடித்தன. பெண்கள் பிரிவில் தென் மண்டல அணி முதலிடம், மேற்கு மண்டல அணி இரண்டாமிடம், மத்திய மண்டல அணி மூன்றாமிடம் பிடித்தன.

ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் சென்னை பெருநகர அணி முதலிடம், தென்மண்டல அணி இரண்டாமிடம், ஆயுதப்படை அணி மூன்றாமிடம் பிடித்தன. ஆண்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில் ஆயுதப்படை அணி முதலிடம், சென்னை பெருநகர அணி இரண்டாமிடம், தென்மண்டல அணி மூன்றாமிடம் பிடித்தன.

வாலிபால் போட்டியின் ஆண் கள் பிரிவில் தென்மண்டல அணி முதலிடம், மத்திய மண்டல அணி இரண்டாமிடம், ஆயுதப்படை அணி மூன்றாமிடம் பிடித்தன. பெண்கள் பிரிவில் ஆயுதப்படை அணி முதலிடம், சென்னை பெரு நகர அணி இரண்டாமிடம், தென் மண்டல அணி மூன்றாமிடம் பிடித்தன.

கபடி போட்டியின் ஆண்கள் பிரிவில் தென்மண்டல அணி முதலிடம், ஆயுதப்படை இரண்டாமிடம் பெற்றன. சென்னை பெருநகர அணி மற்றும் மத்திய மண்டல அணிக்கு மூன்றாமிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. பெண்கள் பிரிவில் மத்திய மண்டல அணி முதலிடம், சென்னை பெருநகர அணி இரண்டாமிடம், தென்மண்டல அணி மூன்றாமிடம் பிடித்தன.

சிறந்த வீரர்களாக சென்னை பெருநகர அணி வீரர் பார்த்திபன் (ஹேண்ட்பால்), கோபிநாத் (கால்பந்து), மத்திய மண்டல அணி வீரர் மணி (கூடைப்பந்து), சாமி நாதன் (வாலிபால்), தென்மண்டல வீரர் பிரவீண் (கபடி) ஆகியோரும், சிறந்த வீராங்கனைகளாக மத்திய மண்டல வீராங்கனை கோமதி (கூடைப்பந்து), சென்னை பெருநகர அணி வீராங்கனை செல்வமீனா (வாலிபால்), மத்திய மண்டல அணி வீராங்கனை கௌசிகா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

அனைத்து போட்டிகளின் முடிவு கள் அடிப்படையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தென்மண்டல அணியும், இரண்டாமிடத்தை மத்திய மண்டல அணியும் பெற்றன. மகளிர் பிரிவில் மத்திய மண்டல முதலிடம் பிடித்தது.

போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளின் வீரர்கள், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா நேற்றிரவு நடைபெற்றது. மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூ தலைமை வகித்தார். திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பரிசுகளை வழங் கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x