Published : 04 Sep 2018 08:52 AM
Last Updated : 04 Sep 2018 08:52 AM

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும்: சரத் கமல் நம்பிக்கை

இந்தோனேஷியாவில் சமீபத்தில் முடிவடைந்த ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் முக்கிய பங்கு வகித் தார். இதேபோல் கலப்பு இரட்டை யரிலும் சரத் கமல், மணிகா பத்ராவுடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் சென்னை திரும்பிய சரத் கமல் செய்தியாளர் களிடம் கூறுகையில், ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்வது என்பது உலக சாம்பியன்ஷிப் அல்லது ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றுவதற்கு நெருக்கமான ஒன்றுதான்.

இதன் மூலம் அந்த மைல்கல்லை அடைவதை தீர் மானிக்க முடியும். இந்த பதக்கம் ஒலிம்பிக்கில் கூட மேடைக்கு செல்ல முடியும் என்பதற்கான அறி குறியாகும்.

டேபிள் டென்னிஸில் சிறந்த 10 அணிகள் ஆசியாவில் இருந்துதான் வருகின்றன. இத னால் ஆசிய விளையாட்டில் பதக் கம் வெல்வது பெரிய உத்வேகம் தான். இது ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோக்கு பார்வையை கொடுக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தனிநபர், அணி மற் றும் கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளுக்கும் நான் தகுதி பெற வாய்ப்பு உள்ளது. உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் 2024-ம் ஆண்டு வரை கூட விளை யாடுவேன். காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x