Published : 13 Jun 2019 03:30 PM
Last Updated : 13 Jun 2019 03:30 PM

இந்தியாவுடன் விளையாடுகிறோம்.. 2 புள்ளிகள் பெற எங்களுக்கு வாய்ப்பு : நியூஸி. பவுலர்பெர்குசன் திட்டவட்ட நம்பிக்கை

இந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இதுவரை மிகவும் தொழில் நேர்த்தியுடன் ஆடிவருகின்றன, அதிலும் நியூஸிலாந்து அணி ‘வந்தோம் வென்றோம்’ என்று 3 போட்டிகளிலும் வென்றுவிட்டது.

 

ஆனால் நாட்டிங்கமில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது, ஆட்டம் நடைபெறுமா என்பதே சந்தேகமாக உள்ள நிலையில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன், “விளையாடவே விரும்புகிறோம்.  இது உலகக்கோப்பை, இதில் இந்தியாவுடன் ஆடுகிறோம், வெற்றி பெற்று 2 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பை மழையினால் இழக்க விரும்பவில்லை.

 

இந்தியாவுக்கு எதிராக ஆடி அவர்களுக்கு எதிராக எங்கள் நம்பிக்கையை இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

 

சில வேளைகளில் இந்திய அணி பொறுமையாக ஆடுவதை எங்களுக்கு காட்டியிருக்கிறார்கள். விக்கெட்டுகளை வீழ்த்தும் முயற்சியில் ரன்களை அதிகம் கொடுப்பதும் நடக்கிறது. ஆனால் இந்திய அணிக்கு எதிராக தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலமே இந்தியாவை வெல்ல முடியும். முடியவில்லையா, நெருக்கடி கொடுத்து ரன் இல்லாத டாட் பால்களை அதிகம் வீசி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

 

அவர்கள் உலகத்தர்மான வீரர்கள் ஆகவே தண்ணிக்குள்ளிருந்து அப்படியே வெளியே தூக்கி வீச முடியாது, படிப்படியாக நெருக்கடி கொடுக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா சிறப்பான கிரிக்கெட்டை ஆடிவருகிறது, இந்தத் தொடரின் டாப் அணிகளுள் ஒன்று. ஆனால் இங்கிலாந்தில் அந்த அணியை நாங்கள் அதிகம் ஆடியதில்லை, அந்த வாய்ப்பு மிக முக்கியம்.

 

இவ்வாறு கூறினார் லாக்கி பெர்குசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x