Published : 13 Jun 2019 12:54 PM
Last Updated : 13 Jun 2019 12:54 PM

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பெரிய அளவில் அழுத்தம் இருக்கும்: இமாம் உல் ஹக்

இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள போட்டியில் வீரர்களுக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தம் இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

டாண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலகக்கோப்பை 2019-ம் 17வது போட்டி கடைசி வரை பரபரப்பாக அமைந்தது, இதில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் போட்டி பாகிஸ்தானுக்கு மிகுந்த முக்கியதுவமாகி உள்ளது.

 இதுகுறித்த கேள்விக்கு பாகிஸ்தான் வீரர் இமான் உல் ஹக் பதிலளித்திருக்கிறார்.

அதில், “உண்மைதான் எங்களால் மழைக் காரணமாக ஒரு போட்டியை விளையாட முடியாமல் போனது. தற்போது எங்களுக்கு எல்லா போட்டிகளும் முக்கியமான போட்டிதான்.

இந்தியாவுடனான போட்டி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இங்கு பாகிஸ்தான் ரசிகர்கள் அதிகம். நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இது மிகப் பெரிய அழுத்தம் நிறைந்த போட்டி. ஆனால் நாங்கள் எங்கள் பலத்தில் கவனம் செலுத்த இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x