Published : 14 Mar 2018 07:13 PM
Last Updated : 14 Mar 2018 07:13 PM

டி20 தொடர்: வங்கதேசம் டாஸ் வென்றது; இந்திய அணியில் ஒரு மாற்றம்

கொழும்பு நகரில் நடந்து வரும் நடாஹஸ் கோப்பை டி20 தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் கொழும்பு பிரேமதேசா அரங்கில் நடந்து வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2 வெற்றிகளுடன் முன்னணியில்இருக்கிறது. இலங்கை, வங்கதேசம் தலா வெற்றியுடன் உள்ளன. வங்கதேசத்துக்கு இது 3-வது போட்டியாகும்.

இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முகமதுல்லா பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். வங்கதேச அணியில் வீரர் டஸ்கினுக்கு பதிலாக அபு ஹைதருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கத்துக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x