Published : 30 May 2019 06:46 PM
Last Updated : 30 May 2019 06:46 PM
உலகம் முழுதும் ட்ரெண்ட் ஆகி வரும் ‘ப்ரே ஃபார் நேசமணி’ ஹாஷ்டேக் ஃபீவர் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜ்சன் சிங்கையும் தொற்றியது.
Civil Engineering Learners’ என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ‘இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?’ எனப் பதிவிட்டது.
மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானதும், பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலை மீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்” என்று கருத்திட்டார்.
உடனே, “அவர் எப்படியிருக்கிறார்?” என மற்றொருவர் கேட்க, “அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்துவிட்டனர்” என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, ‘அவருக்காகப் பிரார்த்திப்போம்’ என்று ஃபேஸ்புக் பக்கத்தில் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இந்த ஹேஷ்டேக் பிரபலமாக, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என எல்லா சமூக வலைதளங்களிலும் நேசமணிக்கான பிரார்த்தனைக் கருத்துகள் இடப்பட்டன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல தமிழ் ட்வீட்கள் போட்டு கலக்கி வரும் ஹர்பஜன் சிங், நேசமணி ஃபீவரில் விழுந்தார். அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்,
“என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani”
என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT