Published : 16 May 2019 07:39 PM
Last Updated : 16 May 2019 07:39 PM
1999-ம் ஆண்டு செப்டம்பரில் கிறிஸ் கெய்ல் தன் முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆடினார். அதன் பிறகு தற்போது 2019 உலகக்கோப்பையில் ஆடுவதன் மூலம் தன் 5வது உலகக்கோப்பை தொடரில் ஆடுகிறார் கிறிஸ் கெய்ல்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்காகக் கலக்கினார், ஆனால் அஸ்வின் கேப்டன்சி பிழை, அணித்தேர்வு தவறுகள் என்று அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போனது. ஆனால் கிறிஸ் கெய்ல் தன் அற்புதமான பங்களிப்பைச் செய்தார்.
இந்நிலையில் அவர் இவ்வளவு உலகக்கோப்பை போட்டிகளில் ஆடுவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
“உள்ளபடியே நான் என் ரசிகர்களுக்காக ஆடுகிறேன், நான் இதில் பொய் கூற விரும்பவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பாக நான் போதும் என்று நினைத்தது உண்மைதான், அதாவது அதுபோன்ற ஒரு சிந்தனை என் மனதில் தோன்றியது உண்மைதான்.
ஆனால் ரசிகர்கள் என்னைப் போகாதே என்று தடுத்தனர். அவர்கள்தான் என்னைத் தொடர்ந்து ஆடவைக்கின்றனர். எதுவும் எப்போதுமே நம் வசம் இருந்து விடாது என்பது எனக்குத் தெரியும்.
அவர்களுக்காக இன்னும் சில போட்டிகளில் ஆடுகிறேன், அவர்கள் அளிக்கும் உத்வேகம் உலகக்கோப்பை வெற்றியில் கூட முடியலாம்” என்றார் கிறிஸ் கெய்ல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT