Published : 06 Apr 2019 12:25 PM
Last Updated : 06 Apr 2019 12:25 PM
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 17வது போட்டியில் 205 ரன்களை எடுத்தும் கோலியின் ஆர்சிபி அணி வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 பந்துகளை மீதம் வைத்து 206/5 என்று அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஒருகட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் நினைத்த நிலையில் கொல்கத்தாவின் ரஸல் சிக்சர்களை விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார்.
இதில் ஆட்ட நாயகன் விருது வென்ற ஆந்த்ரே ரஸல் 13 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 48 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து ரஸலின் நேற்றைய ஆட்டத்தை பலரும் பாராட்டினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், ரஸலின் ஆட்டத்தை ’ முற்றிலுமான பயங்கரமான கனவு’ என்று பதிவிட்டிருந்தது.
இதற்கு கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணியின் ட்விட்டை குறிப்பிட்டு இன்னும் மூன்று நாட்களில் சந்திப்போம் ( சென்னை கொல்கத்தா வரும் செவ்வாய்க்கிழமை மோத உள்ளது) என்று குறிப்பிட்டது.
இதற்கு சென்னை அணியின் பக்கம் பயத்துடன் சிரிக்கும் வடிவேலுவின் படத்தை அவர்களுக்கு பதிலாக பதிவிட்டது.
தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் எதிர் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து வருகிறார் ரஸல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT