Published : 08 Mar 2019 02:10 PM
Last Updated : 08 Mar 2019 02:10 PM
புல்வாமா தாக்குதலிலில் பலியான சிஆர்பி வீரர்களுக்கு அஞ்சலி செலுத்து வகையில் இந்திய அணி வீரர்கள் 3வது ஒருநாள் போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடுகின்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த மாதம் ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மேலும் நாட்டு மக்கள் தேசிய பாதுகாப்புக்கு துறைக்கு நிதிக்கு வழங்கவும் ஊக்குவிக்கும் வகையில் ராணுவ உடையிலான தொப்பியை அணிந்து களத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கான தொப்பியை இந்திய அணி வீரர் தோனி சக வீரரகளுக்கு வழங்கினார்.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி ஃபில்டிங்கை தேர்வு செய்தார்.களத்தில் தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT