Published : 19 Nov 2018 08:59 AM
Last Updated : 19 Nov 2018 08:59 AM
ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் முதல் 8 இடங்களி்ல் இருக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் பைனல்ஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன.
இதில் லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண் டர்சன் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர், 5-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெடரர் 5-7, 6-7 (5-7) என்ற நேர் செட்களில் அலெக்சாண்டர் ஸ்வேரேவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார். இதையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். ஏடிபி டூர் பைனல்ஸ் இறுதிச் சுற்றுக்கு அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல்முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT