Published : 16 Nov 2018 10:42 AM
Last Updated : 16 Nov 2018 10:42 AM

மகளிர் டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரை இறுதியில் இந்தியா

மகளிர் டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி அயர்லாந்து அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.

6-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணியுடன் வியாழக்கிழமை மோதியது.

இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக இசமெல் ஜாய்ஸ் 33 ரன்கள் எடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.

அரை இறுதியில் நுழைந்த இந்திய மகளிர் அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x