Published : 08 Nov 2018 02:19 PM
Last Updated : 08 Nov 2018 02:19 PM

பிட்சை சேதப்படுத்த முயற்சி; நடுவர் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு: சர்ச்சையில் ‘நம்பர் 1’ஜேம்ஸ் ஆண்டர்சன்

கால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிட்சைச் சேதப்படுத்தும் விதமாக ஓடி வந்தார் இதற்கு நடுவர் எச்சரிக்கை விடுத்தார்.

பந்து வீசும் போது பிட்சின் முக்கியப் பகுதிகள் சேதப்படுமாறு ஜேம்ஸ் ஆண்டர்சன் காலை வைத்து அழுத்தினார். இதற்கு நடுவர் கிறிஸ் கஃபானி ஜேம்ஸ் ஆண்டர்சனை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பந்தை ஓங்கி தரையில் அடித்தார் ஆண்டர்சன்.

சர்வதேச போட்டியில் நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது விதிமீறல் செயலாகும். ஆண்டர்சன் தவறை ஒப்புக் கொண்டார், அவருக்கு 2வது தகுதியிழப்புப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில்தான் இந்தியாவுக்கு எதிராக ஒவலில் விராட் கோலிக்கு எல்.பி.தரவில்லை என்று கோபப்பட்டு நடுவர் குமார் தர்மசேனாவிடம்‘ஆக்ரோஷமாக’ பேசியதற்காகவும் நடுவரிடமிருந்து தொப்பியை பிடுங்கிச் சென்றதற்காகவும் எச்சரிக்கப்பட்டு ஒரு தகுதியிழப்புப் புள்ளியைப் பெற்றார் ஆண்டர்சன்.

தற்போது 2வது தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 புள்ளிகளைப் பெறும்போது ஒரு சில போட்டிகளுக்கு தடை விதிக்கப்படுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x