Published : 18 Aug 2018 03:32 PM
Last Updated : 18 Aug 2018 03:32 PM

ரிஷப் பந்த், பும்ரா அணியில்; மீண்டும் தொடக்க வீரர்களை மாற்றிய கோலி: இந்தியா பேட்டிங்

டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவ்வுக்குப் பதில் பும்ராவும், முரளி விஜய்க்குப் பதில் தவணும், தினேஷ் கார்த்திக்கிற்குப் பதில் ரிஷப் பந்த்தும் வந்துள்ளனர்.

இங்கிலாந்து அணியில் சாம் கரனுக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் வந்துள்ளார்.

பிட்சில் புற்கள் காணப்படுவதால் வேகப்பந்து வீச்சை முதல் நாளில் நன்றாகப் பயன்படுத்தி இந்தியாவை சுருட்ட விரும்புவதாக ரூட் தெரிவித்தார்.

இம்முறை விராட் கோலி சுதாரித்து தான் டாஸ் வென்றிருந்தாலும் பீல்டிங்கையே தேர்வு செய்வேன் என்று சொல்லி மாட்டிக் கொள்ளாமல் தெளிவாக பேட் செய்யவே முடிவெடுத்திருப்பேன் என்றார். 2 நாட்கள் கழித்து பிட்ச் கொஞ்சம் மெதுவாகும் அப்போது அஸ்வின் பயனளிப்பார் என்றார் விராட் கோலி.

மீண்டும் அனைத்து விமர்சனங்களையும் காதில் போட்டுக் கொள்ளாமல் விஜய்யைத் தூக்கி விட்டு தவணைக் கொண்டு வந்து தொடக்க வீரர்களை மீண்டும் மாற்றியுள்ளார்.

இந்திய அணி: தவன், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், மொகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, பும்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x