Published : 04 Jul 2018 09:18 AM
Last Updated : 04 Jul 2018 09:18 AM
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்து பிரேசில் அணி சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியானது தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் சமரா மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் 2-0 கோல் என்ற கணக்கில் வென்றது.
இந்த ஆட்டத்தில் ஒரு கோலடித்த நெய்மர், மற்றொரு கோலடிக்கவும் உதவியும் செய்தார். இதன்மூலம் பிரேசில் கால் இறுதிக்கு முன்னேறியது. ஜூலை 6-ம் தேதி நடைபெறும் கால் இறுதிச் சுற்றில் பிரேசில், பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன. இந்த நிலையில் நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் 2 கோல்கள் அடித்த பிரேசில் 88 ஆண்டு கால உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை செய்துள்ளது. இதுவரை அந்த அணி உலக கோப்பையில் மொத்தம் 228 கோல்கள் அடித்து இருக்கிறது. இதற்கு முன்பு ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. தற்போது ஜெர்மனியின் அந்த சாதனையை பிரேசில் அணி முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஒரு கோல் போட்ட நெய்மருக்கு இது 57-வது சர்வதேச கோலாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT