Published : 12 Jul 2018 08:27 AM
Last Updated : 12 Jul 2018 08:27 AM

திண்டுக்கல் அணி 172 ரன் குவிப்பு

டிஎன்பிஎல் தொடரில் ரூபி திருச்சி வாரியர்யஸ் அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. ராமலிங்கம் ரோஹித் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், கேப்டன் அஸ்வின் 28 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், ஹரி நிஷாந்த் 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் விளாசினர். இதையடுத்து 173 ரன்கள் இலக்குடன் திருச்சி அணி பேட் செய்யத் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x