Published : 29 Jun 2018 08:48 AM
Last Updated : 29 Jun 2018 08:48 AM
மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா நெவால், ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அகானே யகுச்சி 15-21, 13-21 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சாய்னா, அகானேவிடம் தோல்வியடைவது இது 6-வது முறையாகும். அவருக்கு எதிராக 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள சாய்னா ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT