Published : 11 May 2018 07:34 AM
Last Updated : 11 May 2018 07:34 AM

கால் இறுதியில் சாய் பிரணீத்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்களான சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினர்.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சாய் பிரணீத் தனது 2-வது சுற்றில் இந்தோனேஷியாவின் பான்ஜி அக மது மவுலானாவை 21-12, 21-14 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். கால் இறுதியில் சாய் பிரணீத் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் லீக் செவுக்யியை எதிர்கொள்கிறார்.

அதேவேளையில் சமீர் வர்மா 21-16, 21-12 என்ற நேர் செட்டில் ஜப்பானின் தகுமா யூடாவை வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தார்.

இந்த சுற்றில் சமீர் வர்மா, சீனாவின் லு குவாங்சூவுடன் மோதுகிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-17, 21-17 என்ற நேர் செட்டில் கொரியாவின் ஹயுக் சோய், ஹயுங் ஹூன் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x