Published : 10 May 2018 07:13 AM
Last Updated : 10 May 2018 07:13 AM
டோக்கியோவில் 2020-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உலகத் தரத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறும்போது, “ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர், வீராங்கனைகளுக்காக டாப்ஸ் (ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்டம்) என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் 200 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உலகத் தரத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒலிம்பிக் போட்டி நடைபெற ஒன்றரை வருடங்கள் உள்ளன. இதனிடையே வீரர்கள் யாராவது காயமடைந்தாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT