Published : 04 Aug 2014 09:40 AM
Last Updated : 04 Aug 2014 09:40 AM

ஜடேஜாவை தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்ட ஆண்டர்சன்

கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா-ஆண்டர்சன் இடையிலான மோதல் விவகாரத்தில் ஜடேஜாவை திட்டியதையும், தள்ளிவிட்டதையும் விசாரணையின்போது ஆண்டர்சன் ஒப்புக்கொண்டது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக கிரிக்.இன்போ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்டிருந்தது. அதுதொடர்பான விசாரணையின்போது பிசிசிஐ வழக்குரைஞர் ஆண்டர்சனை குறுக்கு விசாரணை செய்துள்ளார்.

அப்போது ஜடேஜாவை திட்டியதையும், அவரை கீழே தள்ளியதையும், கிரிக்கெட் விதிமுறையை மீறியதையும் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜடேஜாவின் பல்லை உடைத்துவிடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். ஆண்டர்சன் மீதான விசாரணையின்போது அவரை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் ஜடேஜாவின் மேல் முறையீட்டு விசாரணையின்போது ஆண்டர்சனை குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஆண்டர்சன் மேற்கண்டவாறு கூறினார்” என பிசிசிஐ வழக்குரைஞர் தெரிவித்ததாக கிரிக்.இன்போவில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x