Published : 02 Apr 2018 09:44 PM
Last Updated : 02 Apr 2018 09:44 PM
2011 உலகக்கோப்பையை தோனி படை வென்ற இதே நாளில் மகேந்திர சிங் தோனிக்கு இன்று பத்மபூஷண் விருது அளித்து கவுரப்படுத்தியுள்ளனர்.
இது தற்செயலா அல்லது திட்டமிட்டு அவ்வாறு வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆம். இன்று ஏப்ரல் 2-ம் தேதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இதே நாளில் தோனி, நுவன் குலசேகராவை சிக்ஸ் அடித்து கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்தார்.
இதே தினத்தில்தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோப்பை நாயகனுக்கு பத்மபூஷன் விருது வழங்கினார்.
ராணுவ உடையில் மிடுக்குடன் வந்த தோனி விருதைக் குடியரசுத்தலைவரிடமிருந்து பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT