Published : 06 Apr 2024 08:36 AM
Last Updated : 06 Apr 2024 08:36 AM

மராகேச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்: அரை இறுதியில் யுகி பாம்ப்ரி ஜோடி

யுகி பாம்ப்ரி

மராகேச்: மொராக்கோவின் மராகேச் நகரில் மராகேச் ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, பிரான்ஸின் அல்பானோ ஆலிவெட்டி ஜோடி போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கொலம்பியாவின் நிக்கோலஸ் பேரியன்டோஸ், பிரேசிலின் ரஃபேல் மாடோஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் யுகி பாம்ப்ரி, அல்பானோ ஆலிவெட்டி ஜோடி 7-6(5), 6-7, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x