Published : 24 Aug 2014 12:35 PM
Last Updated : 24 Aug 2014 12:35 PM

நியூஹெவன் ஓபன் இறுதிச்சுற்றில் பெட்ரா

நியூஹெவன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றை யர் பிரிவில் நடப்பு விம்பிள்டன் சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா, ஸ்லோவே கியாவின் மேக்தலீனா ரைபரிக்கோவா ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூஹெவ னில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் அரையிறுதியில் சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பெட்ரா விட்டோவா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் 11 ஏஸ் சர்வீஸ்களை விளாசிய விட்டோவா, இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் வெல்லும் 13-வது சாம்பியன் பட்டமாக இது அமையும்.

மற்றொரு அரையிறுதியில் மேக்தலீனா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் கேமிலா ஜியார்ஜியை வீழ்த்தினார். சர்வதேச தரவரிசையில் 68-வது இடத்தில் இருக்கும் மேக்தலீனா, தனக்கு கிடைத்த 11 பிரேக் பாயிண்ட் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் போட்டியின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ருமேனியா வின் சைமோனா ஹேலப்பை கடந்த செவ்வாய்க்கிழமை வீழ்த்திய மேக்தலீனா, இறுதிச் சுற்றில் விட்டோவாவுக்கு சவாலாக இருப்பார் என எதிர்பார்க் கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x