Published : 17 Jan 2024 07:37 AM
Last Updated : 17 Jan 2024 07:37 AM

இந்தியா ஓபன் பாட்மிண்டன் | 2-வது சுற்றில் பிரணாய், ரஜாவத்

புதுடெல்லி: இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர். டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 30-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத், சகநாட்டைச் சேர்ந்தவரான லக்சயா செனுடன் மோதினார்.

75 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரியன்ஷு ரஜாவத் 16-21, 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். உலகத் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் 21-6, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் டியன் செனை தோற்கடித்தார். பிரணாய் தனது 2வது சுற்றில் பிரியன்ஷு ரஜாவத்துடன் மோதுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x