Published : 15 Jan 2018 10:58 AM
Last Updated : 15 Jan 2018 10:58 AM
உழைப்பும், தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்களின் வாழ்வில் மகிழ்வோடு புது பொங்கல் பொங்கட்டும் என்று ஹர்பஜன் சிங் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்திய அணி கிரிக்கெட் அணிவீரர் ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேகமும் , விவேகமும் , உழைப்பும் , தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில் மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அன்புடன் ஹர்பஜன் சிங் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்பஜனின் இந்த ட்விட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலரும் பாஜி "சிஎஸ்கேக்கு வந்துடுங்க" எனத் தெரிவித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT