Published : 09 Jan 2018 03:36 PM
Last Updated : 09 Jan 2018 03:36 PM

ஊக்க மருந்து விவகாரம்: யூசுப் பத்தான் விளையாடத் தற்காலிகத் தடை

இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புப் புறக்கணிக்கப்பட்ட பிக் ஹிட்டர் யூசுப் பத்தான் தான் எடுத்துக் கொண்ட மருந்து ஒன்றில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்தது தெரியவந்ததையடுத்து தற்காலிகமாக பிசிசிஐ அவர் விளையாடத் தடை விதித்துள்ளது.

இருமல் மருந்துகளில் பொதுவாகக் காணப்படும் ‘டெர்புடலைன்’ என்ற மருந்துப்பொருள் உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தினால் வெளியிடப்பட்ட தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துப் பட்டியலில் இருப்பதாகும்.

கடந்த மார்ச் 16-ம் தேதி உள்நாட்டு டி20 தொடரின் போது யூசுப் பத்தான் பிசிசிஐ ஊக்கமருந்து தடுப்புச் சோதனைக்காக சிறுநீர் மாதிரியை அளித்திருந்தார். பரிசோதனையில் டெர்புடலைன் இருந்தது தெரியவந்ததையடுத்து இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு உறுதியாக வேண்டும், எனவே இப்போதைக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யூசுப் பத்தானிடம் இது குறித்து பிசிசிஐ விளக்கம் கேட்டபோது, தனக்கு பரிந்துரை செய்யப்பட்ட மருந்துக்குப் பதிலாக டெர்புடலைன் உள்ள மருந்து தவறாகக் கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார், பிசிசிஐ இதனை ஏற்றுக் கொண்டு இதனையும் பரிசீலித்து வருவதாக பிசிசிஐ அதிகாரி அமிதாப் சவுத்ரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x