Published : 29 Jan 2018 09:06 AM
Last Updated : 29 Jan 2018 09:06 AM
தி இந்து குழுமம், தைரோகேர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடியின் முதல் கட்ட போட்டியில் திருச்சி காவல்துறை அணி முதலிடம் பிடித்தது
தி இந்து குழுமம், தைரோகேர் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு கபடி அமெச்சூர் சங்க ஆதரவுடன் மாநில அளவிலான கபடி போட்டிகள் திருச்சி, சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. முதல் கட்டப் போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இந்த கபடி தொடருக்கு பிளாக் தண்டர், சுகுனா பம்ப்ஸ் மற்றும் மோட்டார்ஸ், ஆர்த்தோ ஓன், ஜேஎம் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்சர்களாக உள்ளன. முன்னதாக போட்டியை நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி தொடங்கிவைத்தார்.
நேற்று நடைபெற்ற முதல் கட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தில் திருச்சி காவல்துறை அணி 43-41 என்ற கணக்கில் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. முதலிடம் வென்ற திருச்சி அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு, கோப்பையை தைரோகேர் செயல் இயக்குநர் ஏ.சுந்தரராஜு வழங்கினார். மேலும் 2-வது இடம் பெற்ற மயிலாடுதுறை சாய் அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கம், கோப்பை, அரை இறுதியில் தோல்வி கண்ட பாலு மெமொரியல் (மேலகல்கண்டார்கோட்டை), பெரம்பலூர் அணிகளுக்கு ரூ.7,500 ரொக்கப் பரிசை அவர் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT