Published : 11 Dec 2017 04:52 PM
Last Updated : 11 Dec 2017 04:52 PM
டிசம்பர் 8-ம் தேதி முதல் காணாமல் போன இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் சபர்மதி ஆற்றில் இறந்து கிடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8-ம் தேதி காணாமல் போனவுடனேயே சந்தோக் சிங் பும்ராவின் மகள் ரஜீந்தர் கவுர் போலீசில் புகார் அளித்தார். சபர்மதி ஆற்றில் காந்திபாலம் மற்றும் தாதிச்சி பாலத்துக்கு இடையே 84 வயது சந்தோக் சிங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர் அருகில் கிடந்த வாக்காளர் அடையாள அட்டை அது சந்தோக் சிங்தான் என்பதை போலீசாருக்கு உறுதி செய்துள்ளது.
வஸ்த்ராபூர் காவல் நிலையத்தில் பும்ராவின் தாத்தா சந்தோக் சிங் காணாமல் போன அன்றே மகள் கவுர் வஸ்த்ராபூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாயார் தல்ஜித் கவுரை சந்தோக் சிங் பார்க்கச் சென்றார், ஆனால் சந்தோக் சிங்கை பும்ராவின் தாயார் சந்திக்க மறுத்ததோடு கிரிக்கெட் வீரர் பும்ராவின் தொலைபேசி எண்ணையும் தர மறுத்துள்ளார். இதனையடுத்து விரக்தியடைந்த தாத்தா சந்தோக் சிங் விட்டை விட்டு போனதோடு சரி பிறகு திரும்பவில்லை, என்று தெரிவித்திருந்தார்.
நீண்ட நாளைய குடும்பத் தகராறு காரணமாக சந்தோக் சிங்கை பும்ராவின் தாயார் சந்திக்க மறுத்துள்ளார், அதாவது பும்ராவின் தந்தை ஜஸ்வீர் சிங் இறந்தவுடன் குடும்பத்தை அனாதரவாக விட்டு உத்தராகண்ட் சென்று விட்டதால் இரு தரப்பினரிடையேயும் நீண்ட நாளைய மனக்கசப்பு நீடித்து வந்துள்ளது. பும்ராவின் தாய் தல்ஜித் கவுர் நிர்மன் பள்ளியில் ப்ரீ-பிரைமரி செக்சன் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.
இறந்த தாத்தா சந்தோக் சிங் தன் வாழ்வாதாரத்துக்காக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சபர்மதி ரிவர் பிரண்ட் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குக் கூறும்போது, சந்தோஷ் சிங்கின் உடல் ஆற்றில் கிடந்தது. விபத்து மரணம் என்று முதல்கட்டமாக வழக்கு பதிவு செய்துள்ளோம். இவரது மகள் ரஜீந்தர் கவுர் புகார் அளித்துள்ளார். அதில் பழைய குடும்பத் தகராறு காரணமாக பும்ராவின் தாயார், தாத்தா சந்தோக் சிங்கை சந்திக்க மறுத்துள்ளதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT