Published : 15 Dec 2017 10:06 AM
Last Updated : 15 Dec 2017 10:06 AM

ஸ்ரீகாந்த் மீண்டும் தோல்வி

உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள துபை சூப்பர் சீரிஸ் பைனல் பாட்மிண்டன் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது முதல் ஆட்டத்தில் முதல் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அக்சல்செனிடம் தோல்வியடைந்திருந்தார்.

இந்நிலையில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது 2-வது ஆட்டத்தில் நேற்று 7-ம் நிலை வீரரான சீன தைபேவின் சோவ் டின் செனை எதிர்த்து விளையாடினார். சுமார் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 18-21, 18-21 என்ற நேர் செட்டில் போராடி தோல்வியடைந்தார். இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு ஸ்ரீகாந்த்துக்கு குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x