Published : 30 Dec 2017 10:33 AM
Last Updated : 30 Dec 2017 10:33 AM

ஷிகர் தவண் குடும்பம் துபையில் தவிப்பு

தென் ஆப்பிரிக்கக் தொடரில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினம் ஷிகர் தவண் இந்திய அணியினருடன் புறப்பட்டார்.

தவணுடன் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் பயணம் செய்தனர். இந்நிலையில் துபை விமான நிலையத்திலிருந்து தென் ஆப்பிரிக்கா செல்லும் விமானத்தில் தவணின் குடும்பத்தினர் செல்ல விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரது 2 குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் அவர்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து தவண் மட்டும் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x