Published : 29 Jul 2023 06:03 AM
Last Updated : 29 Jul 2023 06:03 AM

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் - லக்சயா முன்னேற்றம்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் லக்சயா சென் முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள லக்சயா சென்னும், 33-வது இடத்தில் உள்ளஜப்பானின் கோகி வத்தனாபேயும் மோதினர்.

இதில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 21-15, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் கோகி வத்தனா பேயை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் இந்தோனேசிய வீரர் ஜோனதான் கிறிஸ்டியை எதிர்த்துவிளையாடுவார் லக்சயா சென்.

பிரனோய் தோல்வி: மற்றொரு கால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரனோய் தோல்வி கண்டார். கால் இறுதிப் போட்டியில் டென்மார்க் வீரர் விக்ஸ்டர் அக்சல்சென் 19-21, 21-18, 21-8 என்ற புள்ளிகள் கணக்கில் பிரனோயை வீழ்த்தினார்.

இந்திய ஜோடி வெளியேற்றம்: ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடியும் தோல்வி கண்டு வெளியேறியுள்ளது.

கால் இறுதிப் போட்டியில் சாத்விக் சிராக் ஷெட்டி ஜோடி 15-21, 25-23, 16-21 என்ற புள்ளிகள் கணக்கில் தைவானின் வாங் சி லீன் - லீ யாங் ஜோடியிடம் வீழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x