Published : 28 Jul 2023 08:26 AM
Last Updated : 28 Jul 2023 08:26 AM

கால் இறுதி சுற்றில் பிரனோய், லக்‌ஷயா சென்

கோப்புப்படம்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், லக்‌ஷயா சென் ஆகியோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், ஜப்பானின் கந்தா சுனேயாமாவை எதிர்த்து விளையாடினார்.

இதில் லக்‌ஷயா சென் 21-14, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனோய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-11 என்ற நேர் செட்டில் டென்மார்க்கின் லாஸ் மோல்ஹெட், ஜெப்பே பே ஜோடியை வீழ்த்திகால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரிகோபிசந்த் ஜோடி 21-23, 19-21 என்ற செட் கணக்கில் போராடி ஜப்பானின் நமி மட்சுயாமா, ஷிராரு ஷிடா ஜோடியிடம் தோல்வி அடைந்தது.-பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x