Published : 14 Jul 2023 09:10 AM
Last Updated : 14 Jul 2023 09:10 AM

டி 20-ல் இந்திய மகளிர் அணி தோல்வி

இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி

மிர்பூர்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

மிர்பூரில் நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 41 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28, யாஷ்டிகா பாட்டியா 12, ஷபாலி வர்மா 11 ரன்கள் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

103 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. ஷமிமா சுல்தானா 46 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார். நிகர் சுல்தானா 14, சுல்தானா கதுன் 12, ஷாதி ராணி 10 ரன்கள் எடுத்தனர். முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்ததால் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x