Published : 09 Jun 2023 06:54 AM
Last Updated : 09 Jun 2023 06:54 AM

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் | கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

கிடாம்பி ஸ்ரீகாந்த்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 23-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 42-ம் நிலை வீரரான சீன தைபேவின் சியா ஹாவ் லீயை எதிர்த்து விளையாடினார். 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 15-21, 19-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

37-ம் நிலை வீரரான இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் தனது 2-வது சுற்றில் 17-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் 4-ம் நிலை வீரரான ஜப்பானின் கோடை நரோகாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்ஆர் அர்ஜூன், துருவ் கபிலா ஜோடி 15-21, 19-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் பென் லேன், சீன் வென்டி ஜோடியிடம் வீழ்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x