Published : 07 Jun 2023 09:22 AM
Last Updated : 07 Jun 2023 09:22 AM

சிங்கப்பூர் ஓபனில் பி.வி.சிந்து தோல்வி

பி.வி.சிந்து

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறினார்.

சிங்கப்பூரில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 13-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் மோதினார். இதில் சிந்து 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 21-19 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் வாங்சரோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x