

திருப்பதி: திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் நேற்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி நேற்று காலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தராஜர் எழுந்தருளி, 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, தங்க கொடி மரம் அருகே கருடன் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. நேற்றிரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவிந்தர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.