Published : 20 Oct 2022 07:18 AM
Last Updated : 20 Oct 2022 07:18 AM

திருப்பதி கோயிலில் விஐபி பிரேக் தரிசனம் 3 நாட்கள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

மறுநாள் 25-ம் தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே இந்த இரு நாட்களும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 8-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று காலை முதல், மாலை 7.30 மணி வரை 12 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படுகிறது. எனவே அன்றும் விஐபி பிரேக் தரிசனம், ரூ.300 சிறப்பு தரிசனம் மற்றும் வாணி அறக்கட்டளை தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதி யாத்திரையை திட்டமிட வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x