Published : 26 Aug 2017 12:51 PM
Last Updated : 26 Aug 2017 12:51 PM

வார ராசிபலன் - 24-08-2017 முதல் 30-08-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்கு விவகாரங்களில் காலதாமதமான நிலை காணப்படும்.  கலைத்துறையினருக்கு செயல்திறன் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு  எதிராகச் சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை.

பொது இடத்தில் பேசும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியும் உல்லாசமும் இருக்கும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்குச் செயல்திறன் அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை எண்கள்: 5, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஊழியர்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். பெற்றோர் வகையில் ஆறுதல் உண்டு. பெண்கள் திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கணவன் வழி உறவினர்களிடம் செல்வாக்கு ஏற்படும்.  கலைத்துறையினருக்கு காரிய வெற்றி ஏற்படும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம் எண்கள்: 3, 9

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பைரவரைத் தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கிக் காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.  

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கிப் பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனத்தில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். தொழில், வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். தயங்காமல் ஏற்றுக்கொள்ளவும்.

சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு மனதில் புதுத் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். கலைத்துறையினர் மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு  முன்கோபம் குறையும். ஆலய வழிபாடு ஆக்கம் தரும்.  மாணவர்களுக்குப் பாதியில் நின்ற கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு எண்கள்: 1, 3

பரிகாரம்: வியாழன்று ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தைப் போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். பூர்விகச் சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரிடும். நிதானமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடுகள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் சிரத்தையாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும்.

உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தைக் காண்பிக்காமல் நிதானமாகப் பேசுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கணவர் வழி உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். அரசியல்வாதிகள், அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர்கள், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம், அடர் சிவப்பு எண்கள்: 5, 6

பரிகாரம்: சனியன்று கிருஷ்ண பகவானைப் பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மைதரும். கெட்டக் கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரம் மெத்தனமாகக் காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், பதற்றமும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவைத் தரும்.  பெண்கள் யாரையும் எதிர்க்காமல் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கலைத்துறையினர் போட்டிகளைக் கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. பெரிய ஒப்பந்தங்களுக்கான சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனமாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், வெள்ளை எண்கள்: 5, 6

பரிகாரம்: சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லாத் தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எல்லா நன்மைகளும் உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பரபரப்பு நீங்கி அமைதியாகப் பணிகளைக் கவனிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்குப் பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் வாக்கு வன்மை அதிகரிக்கும். எதிர்பார்த்த சந்திப்பு கிட்டும். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்குப் பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வச் சேர்க்கை உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x