Last Updated : 13 Jul, 2017 10:14 AM

 

Published : 13 Jul 2017 10:14 AM
Last Updated : 13 Jul 2017 10:14 AM

வீரபத்திர சுவாமி ஆலயத்தின் ரகசியம்

அரக்கன் தக்ஷனை அழித்த வீரபத்திர சுவாமி குடிகொண்டிருக்கும் ஆலயம் லேபாக்ஷியில். கி.பி 1530-ல் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் கட்டப்பட்டது. வானுக்கும் பூமிக்கும் நடந்த உரையாடல் போல பிரம்மாண்டமான கலைநுட்பம் கொண்ட இந்த ஆலயத்தில் 70 தூண்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் ஒரு தூண் மட்டும் தரையைத் தொடாமல் இருக்கிறது. 70 அடி உயரம் கொண்ட தூண் இது. 1910-ம் ஆண்டில் ஆங்கிலேயப் பொறியாளர் ஒருவரின் முயற்சியால் இத்தூணின் அடிப்பாகத்தைத் தரையுடன் பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x