Published : 22 Sep 2014 11:04 AM
Last Updated : 22 Sep 2014 11:04 AM
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் நகர் பெரியண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (41). வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மொத்தமாக பட்டாசு விற்பனை செய்யும் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் திரைப் படம் பார்க்கச் சென்றுள்ளார்.
படம் முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிவந்து பார்த்தபோது, வீட் டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்கையில், அலமாரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள், ஆடைகள் கீழே சிதறிக் கிடந்தன. மேலும், பீரோ மற்றும் கப்போர்டுகளில் வைத்திருந்த 72 பவுன் நகைகளும் திருடுபோனது. இதைக் கண்ட செந்தில்வேலும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT