Last Updated : 13 Apr, 2019 03:26 PM

 

Published : 13 Apr 2019 03:26 PM
Last Updated : 13 Apr 2019 03:26 PM

விகாரி வருடம்; சித்திரை தர்ப்பணம் மறக்காதீங்க!  

விகாரி வருடம் நாளைய தினம் (14.4.19) பிறக்கிறது. தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரைப் பிறப்பில், தர்ப்பணம் செய்து முன்னோரை ஆராதனை செய்யுங்கள்.

வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். மாதந்தோறும் அமாவாசை, கிரகண காலங்கள், புரட்டாசி மகாளய பட்ச காலத்தின் 15 நாட்கள், ஒவ்வொரு தமிழ் மாதமும் பிறக்கிற நாளான மாதப் பிறப்பு என்கிற நாட்களிலெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முன்னோரை ஆராதிக்கவேண்டும் என்றும் அவர்களை அந்த நாளில் வணங்கவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இதோ... விகாரி வருடம் நாளைய தினம் 14ம் தேதி பிறக்கிறது. தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதம் நாளைய தினம் பிறக்கிறது. நாளை 14.4.19 ஞாயிற்றுக்கிழமை அன்று முன்னோர் ஆராதனை செய்ய மறக்காதீர்கள்.

நாளைய தினம், தர்ப்பணம் செய்து பித்ருக்களை ஆராதனை செய்யுங்கள். வீட்டில், முன்னோரின் படங்களுக்கு மாலையிட்டு ஊதுபத்தி முதலான தீபதூபம் காட்டுங்கள். படத்துக்கு முன்னே விளக்கேற்றுங்கள்.

முன்னோருக்குப் பிடித்த உணவைச் செய்து நைவேத்தியமாகப் படைத்து, காகத்துக்கு வைத்துவிட்டு, பிறகு சாப்பிடுங்கள். மேலும் நான்குபேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.

இதனால் பித்ருக்கள் குளிர்ந்துபோவார்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மட்டுமின்றி உங்கள் வம்சத்தையே செழிக்கச் செய்வார்கள் பித்ருக்கள். வீட்டின் தரித்திர நிலை மாறும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கஷ்டங்களும் கடன் தொல்லைகளும் விலகி ஓடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x