Published : 14 Mar 2024 05:30 AM
Last Updated : 14 Mar 2024 05:30 AM

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18-ல் தொடக்கம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 18-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவிழாவின் 10 நாட்களும் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்ககுதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

விழாவின் ஆறாம் நாளான மார்ச்23-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம், இரவு 8.30மணிக்கு மேல் வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளது.

மார்ச் 24-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். மார்ச் 27-ம் தேதி இரவு 7 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x