Published : 09 Mar 2024 06:15 AM
Last Updated : 09 Mar 2024 06:15 AM

ஆழித் தேரோட்ட விழா: 21-ல் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் மார்ச் 21-ம் தேதி நடைபெறவுள்ள ஆழித் தேரோட்டத் திருவிழாவையொட்டி, திருவாரூர் மாவட்டத்துக்கு அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் மார்ச் 21-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மார்ச் 21-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும். மேலும், அன்றைய தினம் நடைபெற உள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x