Last Updated : 21 Feb, 2018 10:55 AM

 

Published : 21 Feb 2018 10:55 AM
Last Updated : 21 Feb 2018 10:55 AM

சஷ்டியில் வேலனை வணங்கினால் சங்கடம் தீரும்; சந்தோஷம் பெருகும்!

உரிய சஷ்டி நாளில், முருகப்பெருமானை வணங்குவோம். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்துவைத்து அருள்வான் என்கின்றனர் பக்தர்கள்.

முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டியில் விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள் பக்தர்கள். அதேபோல் செவ்வாயிலும் வெள்ளிக்கிழமையிலும் கந்த வழிபாடு கவலைகள் தீர்க்கும் மாமருந்து என்று போற்றுகின்றனர்.

இன்று 21ம் தேதி சஷ்டி. இந்த நன்னாளில், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காத அற்புதமான நாளில், சஷ்டியின் நாயகனை, முருகப்பனை தரிசனம் செய்யுங்கள்.

கந்த சஷ்டி கவசம் படியுங்கள். கந்தவேலனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, வேலவனை வழிபடுங்கள். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான். சங்கடங்களையெல்லாம் காணடித்து, சந்தோஷத்தைப் பெருக்கி அருள்வான் சக்திகுமரன்!

சஷ்டியில் முருகனைத் தரிசித்து, சந்துஷ்டியுடன், சந்ததி சிறக்க வாழ்வோம்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x